மண்ணாகிப் போன புட்டுவிக்கி சாலை : காணாமல் போன பல கோடி ரூபாய்

கோவை : குனியமுத்தூர் - உக்கம் இடையே பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தரமற்ற தார் சாலை, மண்பாதையாக மாறியிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கோவை : குனியமுத்தூர் - உக்கம் இடையே பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தரமற்ற தார் சாலை, மண்பாதையாக மாறியிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

குனியமுத்தூரில் இருந்து உக்கடம் வழியாக செல்லும் பாதையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளின் வசதிக்காக குனியமுத்தூரில் இருந்து உக்கடம் செல்ல மாற்றுப்பாதையாக பல கோடி செலவில் புட்டுவிக்கி சாலை போடப்பட்டது. ஆனால், தரமற்ற நிலையில், இந்த சாலை அமைக்கப்பட்டதால், இது தார் சாலையா..? அல்லது மண்பாதையா..? என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு தார் காணாமல் போகியுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு வெறும் 2 மாதங்களே ஆன நிலையில், 20 ஆண்டுகளைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. 

வெறும் தார் சாலை அமைப்பதிலேயே இதுபோன்ற முறைகேடு நிகழ்ந்துள்ளதால், கோடிக் கணக்கில் செலவிடப்பட்டு அமைக்கப்படும் குனியமுத்தூர் - உக்கடம் புதிய மேம்பாலத்தின் நிலை என்ன..? என்பதில் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, அலட்சியமாக இலாப நோக்கில் தரமில்லாத சாலையைப் போட்ட ஒப்பந்ததாரர் மீதும், இதனை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...