நீலகிரியில் விதிகளை மீறிய வாகனப் பயணங்கள் : அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நீலகிரி: உதகையில் விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களை வாகனங்களில் அதிகமாக ஏற்றிச் செல்வதால், விபத்துகள் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகையில் விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களை வாகனங்களில் அதிகமாக ஏற்றிச் செல்வதால், விபத்துகள் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் செங்குத்தான சாலைகள் மற்றும் அதிக வளைவுகளை கொண்ட மாவட்டமாகும். இந்த சாலைகளில் அவ்வப்போது சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் விபத்தில் சிக்கி மனித உயிர்கள் பலியாகுவதும், காயமடைவதும் தொடர் கதையாகவே உள்ளது.



மேலும், மாவட்டத்தில் விவசாயம் தொழில் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் தேயிலைகளைப் பறிக்க தோட்டத் தொழிலாளர்களை சரக்கு வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, பெற்றோர்கள் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், வாடகை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒருசில வாகன ஓட்டுநர்கள் சட்டவிதிகளுக்கு புறம்பான எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். 



மேலும், இருசக்கர வாகனங்கள் வைத்துள்ள பெற்றோர்கள் மூன்றுக்கும் மேற்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இதனால், சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்துக்குள்ளாகி விலைமதிக்க முடியாத மனித உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக் கொள்ளுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...