கோவை விமான நிலையத்திற்குள் யானை சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்

கோவை: கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட இருந்த யானை சிலை அளவில் பெரியதாக இருப்பதால், விமான நிலையத்திற்குள் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட இருந்த யானை சிலை அளவில் பெரியதாக இருப்பதால், விமான நிலையத்திற்குள் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



ஃபைபரால் தயாரிக்கப்பட்ட இரண்டு யானைகளை கோவை விமான நிலையத்திற்குள் நிறுவப்படுவதாக கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுற்றுலா வருபவர்களுக்கும், விமான நிலைய பயணிகளின் பார்வைக்கும் படும் வகையில் அந்த சிலைகளை நிறுவ விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.



அவ்வாறு வந்த யானை சிலை அளவில் பெரியதாக இருந்ததால், விமான நிலைய முகப்பு தடுப்பினை கடந்து செல்ல முடியவில்லை. 



இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ரூ.58 லட்சம் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. யானை மட்டுமல்லாது, நீலகிரி வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், காங்கேயம் காளைகள், தஞ்சாவூர் பொம்மை உள்ளிட்ட சிலைகள் வைக்கப்படுகின்றன. அதோடு, நீலகிரி மாவட்டத்தின் தொடர் இன மக்களின் வாழ்க்கை முறையை காட்டும் பொருட்கள் இங்கு வைக்கப்படுகின்றன. 



தற்போது இந்த பெரிய யானையின் உருவத்தை விமான நிலைய வளாகத்திற்குள் கொண்டு செல்ல ஆலோசித்து வருகிறோம்." என்றனர். 

தற்போது விமான நிலையம் அருகே வைக்கப்பட்டிருக்கும் அந்த யானை சிலை, நீண்ட நாட்களுக்கு அங்கேயே வைக்கப்பட்டு சேதமடைந்துவிடாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதும், உடனடியாக அதனை நிலையத்திற்குள் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...