உதகையில் அரசு கல்லூரியை தொடங்க காரணமானவருக்கு நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தின் முதல் சட்டமேலவை உறுப்பினர், முதல் சட்டமன்ற உறுப்பினர், என்.சி.எம்.எஸ் நிறுவனர், உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமானவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், மது விற்பனை செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தி பூரண மதுவிலக்கை கொண்டு வந்தவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் எச்.பி ஆரிகவுடர்.

இவரின் நினைவாக சென்னை மேற்கு மேம்பாலம் ரயில் முன்பு உள்ள சாலைக்கு ஆரிகவுடர் சாலை எனவும், கூடலூர், பண்டிப்பூர் எல்லையை பிரிக்கும் சாலையில் அமைந்துள்ள பாலத்திற்கு ஆரிகவுடர் பாலம் என பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்துள்ளது.

இந்நிலையில், இவரது 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள இவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், என்.சி.எம்.எஸ் மேலாண்மை இயக்குனர், எச்.பி.ஆரிகவுடர் அவர்களின் குடும்பத்தாரும், என்.சி.எம்.எஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...