உலக அமைதியை வலியுறுத்தி கோவை-காஷ்மீர் பயணம் மேற்கொள்ளும் சிங்காநல்லூர் இளைஞர்

கோவை: உலக அமைதியை வலியுறுத்தி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்கிறார்.

கோவை: உலக அமைதியை வலியுறுத்தி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்கிறார்.

சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதன் (26). தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இரு சக்கர வாகன பிரியரான இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி பல்வேறு நீண்ட பயணங்கள் மேற்கொள்வது வழக்கம்.



இந்நிலையில், உலக அமைதியை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காஷ்மீர் வரை உலக சமாதானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். இந்த பயணத்தில் காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள கார்துங்லா இந்தியாவின் அபாய பகுதி 400 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக சென்று தேசியக் கொடியை நடவுள்ளார்.

கோவையில் இருந்து பெங்களூரு, ஹதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா, டெல்லி, மனாலி, ரோத்தாங் பாஸ், லடாக், கார்துங்லா ஆகிய இடங்களுக்குச் சென்று பின்னர், அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கோவை வருகிறார்.

மொத்தம் 22 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மதன், இது குறித்து கூறுகையில், "ஒரு நாளைக்கு 500 கி.மீ வரை பயணம் செய்ய உள்ளேன். மேலும், 8000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளேன். முதலில் பைக் ரேஸ் வீரராகவும், ஸ்டண்ட் வீரராகவும் வர ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் அனுமதிக்காததால், திருமணத்தை தொடர்ந்து நீண்ட தூர பயணங்களை குடும்பத்தினர் சம்மதத்தோடு செய்து மேற்கொண்டு வருகிறேன். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் மித்ரன் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...