கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் சுப்ரமணியம். இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று அதனை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், அதனை வறுத்து உண்ணவிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிராஜூதீன் கூறுகையில், "வன உயிரினங்களை வதைப்பது சட்டப்படி தவறு. கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் அருகே பறவைகளை வேட்டையாடி நான்கு பேர், அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் புகார்களை தெரிவிக்கவே அந்த நால்வரும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் தற்போது மற்றொருவர் சாரைப்பாம்பை கொன்று உண்பதாகப் பதிவு செய்துள்ளார்.
உழவனுக்கு நண்பனாக விளங்கும் சாரைப்பாம்பை விவசாய நிலத்தில் வைத்தே கொன்று இருப்பது வேதனை அளிக்கிறது. விசத்தன்மை இல்லாத சாரைப்பாம்பானது, விவசாய நிலத்தில் உள்ள எலி போன்ற உயிரினங்களை உண்டு, பயிர்களை சேதமடையாமல் பாதுகாக்கும் நண்பன்.

எனவே, இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் சுப்ரமணியம். இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று அதனை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், அதனை வறுத்து உண்ணவிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிராஜூதீன் கூறுகையில், "வன உயிரினங்களை வதைப்பது சட்டப்படி தவறு. கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் அருகே பறவைகளை வேட்டையாடி நான்கு பேர், அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் புகார்களை தெரிவிக்கவே அந்த நால்வரும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் தற்போது மற்றொருவர் சாரைப்பாம்பை கொன்று உண்பதாகப் பதிவு செய்துள்ளார்.
உழவனுக்கு நண்பனாக விளங்கும் சாரைப்பாம்பை விவசாய நிலத்தில் வைத்தே கொன்று இருப்பது வேதனை அளிக்கிறது. விசத்தன்மை இல்லாத சாரைப்பாம்பானது, விவசாய நிலத்தில் உள்ள எலி போன்ற உயிரினங்களை உண்டு, பயிர்களை சேதமடையாமல் பாதுகாக்கும் நண்பன்.

எனவே, இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.