ராமதாஸ் குறித்து விமர்சனம்: தமிழிசையை கண்டித்து கோவையில் பா.மா.கவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி., அன்புமணி ராமதாஸ் குறித்து பற்றி தவறாக பேசியதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசையை கண்டித்து கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி., அன்புமணி ராமதாஸ் குறித்து பற்றி தவறாக பேசியதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசையை கண்டித்து கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவருமான ராமதாசின் சமுகநீதி மற்றும் இடஒதுக்கீடு போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மருத்துவர் அன்புமணி ராமதாசை கொச்சைப்படுத்தி கருத்துக்களை பதிவிட்ட கூறி பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ம.க., மற்றும் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும், போராட்டங்களை கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் எச்சரித்தனர். 

இப்போராட்டத்தின் போது ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் மறுத்ததையடுத்து காவல்துறையினருடன் பா.ம.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒலிபெருக்கியை பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் போராட்டம் நடத்தப்பட்டது.



இதே போல், மேட்டுப்பாளையத்தில் பா.ம.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியின் மாநில அமைப்பு துணை செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழிசைக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...