மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஆபத்தான நிலையில் காணப்படும் கல்குழிகள்: உயிரிழப்புகளைத் தவிர்க்க மக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இதற்காக ஆங்காங்கே மலையடிவாரங்களில் உள்ள பாறைகள் பல மீட்டர் ஆழம் வரை வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை மற்றும் சிறுமுகை செல்லும் சாலையோரங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் கல்குழிகள் காணப்படுகின்றன.



இவற்றில் பெரும்பாலானவற்றில் தற்போது பாறைகள் வெடி வைத்து வெட்டி எடுக்கும் பணி முடிவடைந்த காரணத்தினால் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் ஆழமான கல்குழிகள் போதிய பாதுகாப்பில்லாமல் சுற்றுப்புற தடுப்புகளின்றி காணப்படுகின்றன.

மேலும், தற்போது தொடங்கியுள்ள பருவமழை காரணமாக இக்குழிகளில் தண்ணீர் நிரம்பி குட்டைகள் போல் காட்சியளிக்கின்றன. நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த குழிகள் மிக ஆபத்தானது, இதில் இறங்கி குளிக்கவோ அல்லது மீன் பிடித்து விளையாடவோ முயற்சித்தால் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க இயலாது என தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், பயன்பாட்டில் இல்லாத இது போன்ற கல்குழிகளை சுற்றி தடுப்புகள் ஏற்படுத்துவதோடு, எச்சரிக்கை அறிவிப்புகளையும் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

நீர்த் தேக்கத்தால் வழுக்கும் தன்மையோடு ஆளை விழுங்கக் காத்திருக்கும் இந்த ஆழமான கல்குழிகளை சுற்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதே இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...