பலத்த காற்றுக்கு பள்ளியின் ஜன்னல் கதவு பறந்து விழுந்ததில் 3 சிறுமிகள் படுகாயம்

திருப்பூர் : பெருமாநல்லூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் ஜன்னல் கதவு பறந்து சென்று விழுந்ததில் 3 சிறுமிகள் பலத்த காயமடைந்தனர்.


திருப்பூர் : பெருமாநல்லூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் ஜன்னல் கதவு பறந்து சென்று விழுந்ததில் 3 சிறுமிகள் பலத்த காயமடைந்தனர். 

திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் நெசவாளர் காலனி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்திலேயே தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இரு பள்ளிகளிலும் 1,600 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி முடிந்ததும் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவிகளான சிவப்பிரியா (8), மோனிகா (8) மற்றும் கீர்த்தனா(8) ஆகியோர் பள்ளியின் புதிய கட்டிடம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, பள்ளியின் 2-ம் தளத்தில் இருந்த ஜன்னல் கதவு காற்றுக்கு பெயர்ந்து, முதல் தளத்தின் பக்கவாட்டு சுவரில் பட்டு அங்கிருந்த சிறுமிகள் மூவர் மீதும் விழுந்தது. இதில், மூவரும் காயம் அடைந்தனர். 

இதையடுத்து, அங்கு இருந்த சகமாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உடனடியாக மூவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில், சிவப்பிரியா காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். பள்ளியின் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையும், பள்ளி கட்டிடத்தை அலட்சியமாக கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:- பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...