மதுக்கடை வேண்டும் : பொதுமக்களுடன் மல்லுக்கட்டிய குடிமகன்கள்

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இன்று புதியதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில் அங்கு சென்ற குடிமகன்கள் கட்டாயம் மதுக்கடை வேண்டும் என்று வாக்குவாதம் நடத்தினர்.

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இன்று புதியதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில் அங்கு சென்ற குடிமகன்கள் கட்டாயம் மதுக்கடை வேண்டும் என்று வாக்குவாதம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்ன கோடங்கிபாளையம், என்.ஜி.ஆர் காலனி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு புதியதாக அரசு மதுபான கடை திறக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டாம் என்று மனு அளித்தனர்.

ஆனால், பொதுமக்களுக்கு தெரியாமல் இன்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புதிய மதுபான கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகளும் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

மது பிரியர்கள்

இந்த களேபரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் சில அங்கு வந்த குடிமகன்கள் மதுபான கடைக்கு நீண்ட தூரம் செல்வதால் அங்கு உள்ள கடையை மூடக்கூடாது என்று கூறினர். முற்றுகை போராட்டம் நடத்தி, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்த பெண்கள் இதனைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட, குடிமகன்களிடம் மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே, சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் குடிமகன்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் கலைந்து போகக் கூறினர்.



மதுபான கடையை நிரந்தரமாக அகற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...