பொலிவிழக்கும் மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம்

கோவை: முறையான பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாததால் மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பயணிகளுக்கு பயன்படாமல் உள்ளது.


கோவை: முறையான பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாததால் மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பயணிகளுக்கு பயன்படாமல் உள்ளது.

மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து துடியலூர், மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் பெற்ற இந்த பேருந்து நிலையத்தில் வண்ண மீன் தொட்டிகள், நவீன இயந்திரக் கடிகாரம், இடை தூக்கி, சூரிய ஒளி மற்றும் காற்று மூலமாக மின் உற்பத்தி செய்யும் திட்டம் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் திறந்து வைத்த சில மாதங்களிலேயே பழுதாகி, யாருக்கும் உபயோகமில்லாமல் தற்போது தூசி படிந்து கிடக்கின்றன.

இந்நிலையில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளின் தரமும் குறைந்து கொண்டே வருகிறது.

ஆக்கிரமிப்பு

பயணிகளுக்காகவே பேருந்து நிலையத்திற்குள் தனியார் உணவகங்களும், பேக்கரிகளும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கிவருகிறது. இந்த கடைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பிட்ட இடத்தை தாண்டியும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்து வருவதால் இந்த கடைகள் பயணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளன. மேலும், இந்த கடைகளில் இருந்து கழிவு நீரும், குப்பைகளும் முறையாக வெளியேற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தனியார் வாகனங்களை பேருந்து நிலையத்திற்குள் நிறுத்த அனுமதி இல்லாதபோதும், இந்த கடைக்காரர்களின் தயவோடு ஏராளமான இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் ஒரு புறம் ஆக்கிரமித்து வருகின்றன.



மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை

இந்த பேருந்து நிலையத்தில் கட்டண அடிப்படையில் இரண்டு பொது கழிப்பறைகளும், மாற்றுத் திறனாளிக்கான ஒரு கழிப்பறை என மொத்தம் மூன்று கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை இதுவரை பயன்பாட்டுக்கே வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.



கழிவு நீர் தேக்கம்

புதிய பேருந்து நிலைய வளாகம் பிரதான சாலையிலிருந்து தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால் மழை பெய்யும் நாட்களில் மழை நீர் சாக்கடை நீரோடு கலந்து பயணிகளுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது. மேலும், சாதாரண நாட்களிலும் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி பேருந்துக்காக காதிருக்கும் பயணிகளை மூக்கைப் பிடிக்க வைக்கிறது.



இவை மட்டுமின்றி பேருந்திலிருந்து பயணிகள் இறங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடைகள் அனைத்தும் சேதமாகி, டைல்ஸ்கள் சிதைந்து காணப்படுகிறது. இதனால் முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும் சிரமப்பட்டு வருவதாக பயணிகள் புகாரளிக்கின்றனர்.



இவ்வாறு சிதைந்து வரும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, ஐ.எஸ்.ஐ தரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், இது தொடர்பான செய்தியை படிக்க கீழே லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://simpli-city.in/news-details.php?nid=18197&isnotify=n

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...