பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடக்கம்; பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.


கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில், இம்மாத தொடக்கம் முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக அணை நிரம்பி பவானியாற்றில் நீர் திறக்கப்பட்டது.

அந்த ஆற்றில் ஏற்பட்ட வெளியேற்றப்பட்ட நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பரளிக்காடு என்ற இடத்தில் வனத்துறை சார்பில் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக கடந்த 10-ம் தேதி வனத்துறை அறிவித்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக மழையின் அளவு குறைந்து அணையின் நீர்மட்டமும் அதன் நீர்வரத்தும் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டிருந்த சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.



குற்றாலம்







கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய:-

http://coimbatorewilderness.com/Booking-Baralikadu.aspx

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...