கோவையைச் சேர்ந்த பெற்றோர்கள் கவனத்திற்கு..! : தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த விபரம் தெரிய வேண்டுமா..?

கோவை: கோவையில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை: கோவையில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

பொதுவாக தனியார் பள்ளிகளில் திணிக்கப்படும் கட்டணக் கொள்ளையை, குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் சுமக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில், இதுபோன்று கட்டணக் கொள்ளைகளை தடுக்க தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு கல்வி கட்டண நிர்ணய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியானது, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்துகிறது. எனவே, கோவையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டணங்களையும் பட்டியலிட்டு, மாவட்ட வாரியமாக அறிவித்துள்ளது. அதனை https://goo.gl/gXa225 என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், டியூஷன், புத்தகம், சீருடை போன்ற கட்டணங்களைத் தவிர, வேறு ஏதேனும் கட்டணம் வசூலித்தால், தமிழ்நாடு கல்வி கட்டண நிர்ணய கமிட்டி, DPI கேம்பஸ், சென்னை 600006 என்ற முகவரிக்குப் புகாரை கடிதம் மூலம் தக்க சான்றுகளுடன் அனுப்பவும். புகார் உறுதியானால், தாங்கள் கட்டிய கூடுதல் பணம் திரும்ப கிடைக்க வழி வகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...