கோவையில் சர்வதேச போதை ஒழிப்பு தின பேரணி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

கோவை: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தனர்.


கோவை: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தனர்.



ஆண்டும் தோறும் ஜுன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் போதை பொருள் குறித்தும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். 



அதன் ஒரு பகுதியாக சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி செஞ்சிலுவை சங்கம் முன்பு தொடங்கியது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



வ.உ.சி மைதானத்தில் நிறைவு பெற்ற இந்த பேரணியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். 

இதேபோல், கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வளாகத்தில் தொடங்கிய பேரணியை முகாம் டெப்டி கமாண்டர் கெளரவ் சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த பேரணியானது எல்லை பாதுகாப்பு வளாகத்தில் இருந்து கிட்டாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வரை சென்றது ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.



இதில் 50-க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...