கோவையில் அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி : நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

கோவை : மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை : மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.



வடவள்ளி அருகேயுள்ள பொம்மனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டில் மூத்த மகன் வேதா சுப்பிரமணியம் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த போது, பால்காரர் குமார் என்பவர் மூலம் ஈஸ்வர் ராமச்சந்திரன் என்பவரும், மருதமலை அடிவாரத்தில் அருணகிரிநாதர் வழிபாட்டு மையம் என்ற பெயரில் ஜோதிட தொழில் செய்து வரும் குமரசிவம் என்பவரும் அறிமுகமாகியுள்ளனர். 

ஈஸ்வர் மத்திய அரசின் கலால்துறையில் பணியாற்றி வருவதாகவும், அத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ. 15 லட்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர்கள், பிரதமர், ஆளுநர் போன்றவர்களுடன் விருது வாங்குவது போல புகைப்படங்களைக் காட்டியும், வேலை கிடைக்கவில்லை எனில் பணத்தை திரும்பத் தருவதாகவும் ஈஸ்வர் நம்பிக்கை அளித்துள்ளார். இதையடுத்து, கிருஷ்ணசாமி ரூ. 11 லட்சம் பணத்தை ஈஸ்வரிடம் கொடுத்துள்ளார். 



அதேபோல, சில மாதங்களில் வேதா சுப்பிரமணியத்திற்கு மத்திய கலால் துறையில் நுண்ணறிவு அதிகாரி வேலை கிடைத்தற்கான பணியாணை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். மேலும், ஒரு வீட்டை மத்திய கலால் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் எனக்கூறி இதே போல 35-க்கும் மேற்பட்டோருக்கு 6 மாத காலம் பயிற்சியும் வழங்கியுள்ளார். மாத சம்பளமாக அவர்களுக்கு ரூ. 27,760 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் தெரிகிறது. அதன்பின், பணம் வாங்கி வேலை தந்த விவரம் உயரதிகாரிகளுக்கு தெரிந்து விட்டதால், சென்னை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து விட்டதாக அவர்களிடம் கூறிய ஈஸ்வர், பின்னர் தலைமறைவாகி விட்டார். 

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது ஈஸ்வர் ராமச்சந்திரனும், குமரசிவமும் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக போலி அரசு அலுவலகம் நடத்தியும், போலி அரசு ஆவணங்கள் தயாரித்தும் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி அரசு அலுவலகம் நடத்தி போலி அரசு ஆவணங்கள் வழங்கி ரூ. 11 லட்சம் மோசடி செய்த ஈஸ்வர் ராமச்சந்திரன், குமரசிவம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிருஷ்ணசாமி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

இதேபோல, பட்டதாரி இளைஞர்களைப் பல இடங்களில் ஈஸ்வர் ராமச்சந்திரன் மோசடி செய்திருப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவையில் போலி அரசு அலுவலகம் நடத்தி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட பட்டதாரிகள் மத்தியில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...