நீங்கள் சுத்தம் செய்துட்டே வாங்க..! நாங்க அசுத்தம் செய்துட்டே வர்ரோம்...! : வாலாங்குளம் மருத்துவக் கழிவுகளால் மாசு

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளை தூய்மைச் செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், வாலாங்குளத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தன்னார்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளை தூய்மைச் செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், வாலாங்குளத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தன்னார்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 



கோவை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அனைத்து நீர்நிலைகளிலும் தூர்வாருதல், சீரமைப்புப் பணிகள் போன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்கள், ஏரிகள் போன்ற நீர்த்தேக்கங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்புத் தருமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்கடம் வாலாங்குளத்தில் தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளத்தில் மருத்துவ கழிவுகளும், தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகளின் கவர்களும் கிடந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் நீரில் கலந்து விடுகின்றன. இந்தக் குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை கோவை நகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சாப்பிட்டு நோய் தொற்று ஏற்படுமே என்ற எண்ணத்தில் தன்னார்வலர்கள் மிகவும் வருந்தினர். இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுகளைக் கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.



இலாப நோக்கமற்று கோவையில் உள்ள நீர்நிலைகளை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் இந்தத் தூய்மைப் பணியில் பங்கெடுக்காவிட்டாலும், இதுபோன்ற சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது அனைவரின் கருத்தாகும். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...