வரன்முறைபடுத்தப்பட்ட மனைகளுக்கான உத்தரவை பெற மண்டல அலுவலகங்களை அணுக அறிவுறுத்தல்

கோவை: மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.


கோவை: மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து உத்தரவு பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனையிடங்கள் வரன்முறை செய்தல் தொடர்பாக, தகுதி வாய்ந்த மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள தனிமனையினை வரன்முறை செய்யும்பொருட்டு மண்டல அலுவலகங்களிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தனிமனைகளை அரசாணைகள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு வரன்முறை செய்யவும் மண்டல உதவி ஆணையாளர்களுக்கு அதிகார பகிர்வு அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரங்கள் அமைத்தல், பத்திரிக்கை செய்திகள் வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைகளை வரன்முறைப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வரன்முறைக் கட்டணங்களை செலுத்திய பின்னர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் உள்ள பொதுமக்கள் உடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து உத்தரவுகளை பெற்றுக்கொள்ளலாம். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...