'மரணமடைந்தவர்களை எடுத்து செல்ல மரண வேதனை அடைகிறோம்': நீலகிரி மக்கள் கண்ணீர் மனு

நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரட்டி ஊராட்சி பாரத் நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீழ்பாரத் நகரில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த 40 வருடங்களாக எங்களுக்கு சாலை வசதியே இல்லை. பிரசவம் மற்றும் அவசர தேவைகளுக்கு செல்லும் போது கடும் வேதனைகளை சந்திக்கிறோம் மரணமடைந்தவர்களை எடுத்து செல்லும் போது மரண வேதனை அடைகிறோம்.

கழிவறை கழிவுகளை அப்புறப்படுத்த சாலை வசதி இல்லாததால் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதது. தனியார் நிலம் வழியாக ஒற்றையடி பாதையில் சென்று வருகிறோம். எனவே அந்த பாதையை சாலையாக மாற்றித் தந்தால் அவசர தேவைகளுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...