அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டும் பணியை தொடங்கியது யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186

கோவை: பொம்மனாம்பாளையம் மற்றும் திருமலையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளில் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186, வகுப்பறை கட்டும் பணியை தொடங்கியது.

கோவை: பொம்மனாம்பாளையம் மற்றும் திருமலையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளில் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186, வகுப்பறை கட்டும் பணியை தொடங்கியது.

இது தொடர்பாக ரோட்டரி கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமலையாம்பளையம் பகுதி அரசு பள்ளியில் வகுப்பறை கட்டும் பணியின் மொத்த மதிப்பு ரூ.8,50,000. இதில், ஆனமலை ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.4, 50,000 நன்கொடையாக அளித்துள்ளது. கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் ரூ.4,00,000 நன்கொடை வசூலித்து அளித்துள்ளது. இந்த திட்டத்தால் ஏழை எளிய மாணவர்கள் 80 பேர் பயன்பெறுவர்.



கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சங்கத்தின் மற்றொரு திட்டமான பொம்மனாம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் நான்கு வகுப்பறைகள் கொண்ட பிளாக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பறைகள் ரூ.32,00,000 செலவில் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நன்கொடையாளர்கள், நிதி அளிப்போரிடமிருந்து இவை பெறப்பட்டன. இந்த திட்டத்தால் 70 அனாதை மாணவர்களும், 100 ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறுவர்.



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...