கோவை குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

கோவை: கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது  வலிப்பு ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கனமழை காரணமாக கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 9-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கோவை குற்றாலத்தில்  குளிக்க வனத்துறையினர் தடை விதித்ததிருந்தனர். 

இந்த சூழலில், மழை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 

உயிரிழப்பு

நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், அங்கு பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். 

இந்த சூழலில், அருவியில் குளித்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. 

உடனே, வனத்துறையினர் அவரை பொதுமக்கள் உதவியுடன் வெளியே அழைத்து வந்தனர். 

ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி  உயிரிழந்தவரின் விபரம், அவருடன் வந்ததாக சொல்லப்படும் நபர், சிசிடிவி காட்சிகள், குற்றால அருவி நுழைவாயில் கட்டண பதிவு புத்தகம் ஆகியவை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருவியில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததால் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...