மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் மக்கள் பீதி

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப் பகுதியினை ஓட்டி அமைந்துள்ள குரும்பனூர், தாசம்பாளையம், வெல்ஸ்புரம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு மலை அடிவார விவசாய நிலத்திற்கு வரும் யானைகள் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வருவதுடன், ஊருக்குள் நுழைந்து சாலைகளிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தாசம்பாளையம் பகுதியில் உள்ள முத்து என்பவரது தோட்டத்தினுள் நுழைந்து அங்கு விளைவிக்கப்பட்டிருந்த சோளப் பயிர்களை சேதப்படுத்தியது. 

தொடர்ந்து, தாசம்பாளையம் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சாலையில் நடமாடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். 

இருப்பினும் காலை 4 மணி வரை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளையே சுற்றி வந்த யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறை உதவியுடன் நெல்லிமலைக்கு விரட்டப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊடுருவல் காரணமாக இரவில் மக்கள் வெளியே நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...