பல்லடத்தில் சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

திருப்பூர்: வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் உரிய காலத்தில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு கிடைக்கும் என்று பல்லடத்தில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜீ பேசியுள்ளார்.

திருப்பூர்: வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் உரிய காலத்தில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு கிடைக்கும் என்று பல்லடத்தில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜீ பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சார்பு நீதிமன்ற நீதிபதியாக மீனா சந்திரா பொறுப்பேற்றார்.



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது நீதிபதி இந்திராபானர்ஜீ பேசுகையில், "ஒரு வழக்கு நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வரும் பொழுது அந்த நீதிமன்றத்தின் நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான் அந்த வழக்கிற்கு தகுந்த நீதி உரிய நேரத்தில் கிடைக்கும்.

இவ்வாறான சார்பு நீதிமன்றங்கள் திறப்பதால் மக்களுக்கு உரிய நீதி, உரிய நேரத்தில் கிடைக்கும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...