டவர் லைன் அமைக்கும் பணியில் கம்பம் உடைந்து மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளி பலி

கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் கம்பி அறுந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.


கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் கம்பம் உடைந்து (சேனல்) 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (45). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்து வரும் இவர் கடந்த சனிக்கிழமை அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிஸ்க் (disk) என சொல்லக்கூடிய உதிரி பாகத்தை ஏற்றும் போது கம்பம் உடைந்து (சேனல்) 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சார உதிரி பாகங்கள் தரமற்றதாக இருந்த காரணத்தினால் தான் கம்பம் உடைந்து கீழே விழுந்தாக தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தில் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "தரமற்ற உதிரி பாகங்களால் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதே போல் அரசு தரப்பில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்." என்றார்.

பெரியசாமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நிதி திரட்டப்பட்டு அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...