பெண் ஐ.டி ஊழியர்கள் திடீர் மயக்கம் : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பணிக்கு செல்லும் முன் இரவு பணியாளர்கள் புரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் புரோட்டா சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால், நேற்று ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஜீரணம் எளிதில் ஆகாத புரோட்டாவை உண்டதால் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று காலை முதலே பெண் ஊழியர்கள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து வருகின்றனர். 

இப்படி திடீரென மயக்கமடைந்து வரும் பெண் ஊழியர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் ஆறு பெண் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...