கோவையில் குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை: அமைச்சர் வேலுமணி விளக்கம்

கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கலையரங்கத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்கள் திருமணத்திற்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பயனாளிகளுக்கு திட்டங்களை வழங்கினார்.

பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த பெண்கள் 1,446 பேருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு முடித்த 633 மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 2216 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கமும் என மொத்தம் 13.94 கோடி ரூபாய்க்கான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- 

24 மணி நேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த 2008-ல் தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது அ.தி.மு.க., அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சூயஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த போடப்பட்டுள்ளது. 

தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை முழுமையாக அவர்களிடம் கொடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் தான் முழு கட்டுப்பாடும் உள்ளது. இது ஒரு அருமையான மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம். எந்த ஒரு நல்ல திட்டம் வந்தாலும் விமர்சிக்கப்படுகின்றது.

தண்ணீர்

கோவை மக்களுக்கு போதுமான தண்ணீர் நமது மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அதனை வினியோகம் செய்வதில்தான் சிக்கல் இருக்கின்றது. தண்ணீர் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை. மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போகின்றோம்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...