சிறுவாணி அருகே நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்சியத்தால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் காயம்

கோவை: சிறுவாணி அருகே நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால், மரக்கிளை விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

கோவை: சிறுவாணி அருகே நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால், மரக்கிளை விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் படுகாயமடைந்தனர். 

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள சில மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, விரிவாக்கப் பணிகளுக்கு ஏதுவாக, கள்ளிப்பாளையம், கருப்பராயன் கோவில் அருகே உள்ள புளிய மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாமல், அலட்சியமாக இந்தப் பணிகளை செய்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர். 



இந்த நிலையில், இன்று காலையில் வங்கிக்குச் சென்று வந்த போளுவாம்பட்டியை சேர்ந்த இரு பெண்கள் சிறுவாணி சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் மீது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில், ஒரு பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அவர்களின் இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. போக்குவரத்து இல்லாத சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பணியாளர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த சம்பவம் மேலும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



இதனிடையே, இந்த விபத்திற்குக் காரணமான சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ செலவையும், வாகன பழுதுபார்ப்பையும் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...