உதகையில் விரைவில் உபயமாகிறது சூழலை கெடுக்காத பசுமை பூங்கா..!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

நீலகிரி: நீலகிரியில் ரூ. 10 கோடி செலவில் புதிதாக 'சூழல் பசுமை பூங்கா' அமைக்கப்படுவதன் மூலம், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.


நீலகிரி: நீலகிரியில் ரூ. 10 கோடி செலவில் புதிதாக 'சூழல் பசுமை பூங்கா' அமைக்கப்படுவதன் மூலம், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.



நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஆண்டுக்கு 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து சென்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, தேயிலை பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர் வீழ்ச்சி மற்றும் படகு இல்லம், மரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி கோடநாடு காட்சிமுனை ஆகிய சுற்றுலா மையங்கள் உள்ளன.

பழைய சுற்றுலாத் தலங்களால் அலுப்பு:

கடந்த சில ஆண்டுகளாக, மாநில அரசு சார்பில் நீலகிரி மாவட்டத்தில் புதியதாக சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் அமைக்கப்படவில்லை. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏற்கனவே பார்த்த சுற்றுலா தலங்களை மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 'மாவட்டத்தின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில், மேலும், பல சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். அதேவேளையில், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு சென்றது.



முதலமைச்சர் அறிவிப்பு:

இந்நிலையில், மாநில அரசின் மானிய கோரிக்கையின் போது, 'உதகையில், ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக சூழல் பசுமை பூங்கா அமைக்கப்படும்' என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது, இந்தப் பூங்கா அமைக்க, ஒன்பதாவது மைல், சூட்டிங் மட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வருவாய் துறைக்கு சொந்தமான, எட்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது புல் வெளியாகக் காட்சியளிக்கிறது. இதன் அழகு மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, 'சூழல் பசுமை பூங்கா' விரைவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கூடுதல் வருவாய்:







இந்தப் பூங்கா அமைக்கப்பட்டால், கேரள, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், உதகைக்கு வரும் வழியில், இதனைக் கண்டு ரசித்துவிட்டு நகருக்குள் வர முடியும். இதன்மூலம் கோடை சீசன், தொடர் விடுமுறை காலங்களில் உதகைக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், நெரிசல் இல்லாமல், ஒரு புதிய சுற்றுலா தலத்தை கண்டு ரசித்து செல்ல முடியும். இதனால், நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இடத்தை வருவாய் துறையிடம் இருந்து தோட்டக்கலைத் துறை பெறவேண்டும். பின், பூங்கா பணிக்கு உடனடி நிதி பெற்றால்தான், அடுத்த கோடை சீசனுக்குள் பூங்காவை தயார் செய்ய முடியும். 

அறிவிப்பு மட்டுமே:







இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், "முதலமைச்சர் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளார். இதற்கான ஆணை பிறப்பித்த பின்னரே இத்திட்டத்தின் முழு விபரம் தெரிய வரும். எனினும், புதிய பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருப்பது சுற்றுலாப் பயணிகள், மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு ஆணை பிறப்பித்தவுடன் இதற்கான பணி விரைவுபடுத்தப்படும்" என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...