பிரேசில் - கோஸ்டாரிக் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த இந்தியச் சிறுமி யார் தெரியுமா..?

பிரேசில் - கோஸ்டாரிகா அணிக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த இந்திய சிறுமி என்ற பெருமையை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-வயது சிறுமி பெற்றுள்ளார்.

பிரேசில் - கோஸ்டாரிகா அணிக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த இந்திய சிறுமி என்ற பெருமையை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-வயது சிறுமி பெற்றுள்ளார். 

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஒவ்வொரு போட்டிகளிலும் பயன்படுத்தப்படும் பந்துகளை, சிறுமியின் கைகளால் எடுத்து வரப்பட்டு, போட்டிகளை ஆரம்பிக்கப்படும். இதற்காக, உலகம் முழுவதும் சிறுமிகளுக்கென ஓ.எம்.பி.சி. எனப்படும் அதிகாரப்பூர்வ போட்டியின் பந்தை எடுத்து வருபவருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதில், இந்தியா சார்பில், 1,600 சிறுமிகள் தேர்வாகினர். அதில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கே. நதினா ஜான் மற்றும் ரிஷி தேஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்தியா சார்பில் 2 பேர் உலகக் கோப்பைப் போட்டியை தொடங்கி வைக்கச் செல்வது முதல்முறையாகும். உலக அளவில் 64 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பிரேசில், கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான பந்தை கோத்தகிரி சிறுமி நதினா ஜான் எடுத்து வந்து, போட்டியைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம், உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த முதல் தமிழக சிறுமி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 2-க்கு-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...