மேட்டுப்பாளையம் அருகே 36 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும் மராத்தான் இசைக்கச்சேரி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும் மராத்தான் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும் மராத்தான் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது.

பாரம்பரிய இசைக்கலைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஒரு சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடத்தப்படும் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது. ஸ்ரீசாய் கலாசேத்ரா சார்பில் மிக அதிக நேரம் தொடர்ந்து நடத்தப்படும் இந்த மராத்தான் இசை நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 43 பேர் ஒருங்கிணைந்து, வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், வீணையிசை, கிடார் மற்றும் கீபோர்ட் என இசைக்கருவிகளை வாசித்தும் பாடியும் வருகின்றனர்.

இந்த சாதனை முயற்சிக்கு கடந்த பத்து மாதங்களாகத் தீவிர பயிற்சியெடுத்து களம் இறங்கியுள்ள இக்கலை குழுவினர், இன்று சனிக்கிழமை காலை ஏழு மணிக்குத் துவங்கி நாளை ஞாயிறன்று இரவு ஒன்பது மணிக்கு நிறைவடைய உள்ளது. முறைப்படி சங்கீதம் கற்ற இளம் மாணவிகள், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளை இடைவிடாமல் வாசிப்பதையும், பாடுவதையும் பலரும் கண்டு ரசித்து வருகின்றனர். நமது பண்பாடு மற்றும் பாரம்பரிய இசையைப் பலரது கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...