எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தாலும் மத்திய அரசைப் பாராட்டாத தமிழக அரசியல் கட்சிகள்: கோவையில் தமிழிசை வருத்தம்

கோவை: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குப் பாராட்டை தெரிவிக்க மறுப்பதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.



கோவை: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குப் பாராட்டை தெரிவிக்க மறுப்பதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- மத்திய அரசு எதற்கெல்லாம் விமர்சிக்கப்பட்டதோ. அதெல்லாம் சரி செய்யப்பட்டது. பன்னெடுங்காலமாக புறக்கணிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வந்தாலும், சில கட்சிகள் மத்திய அரசுக்கு பாராட்டை தெரிவிக்க மறுக்கின்றனர். 

காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு போவோம் எனச் சொல்லும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர். காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் உட்பட எந்தக் கட்சியும் குமாராசாமிக்கு எதிர்ப்பைக் காட்டவில்லை. மேலும், மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்காகக் கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் இருக்கின்றார். கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி தமிழகத்திற்கு எதிராக பேசும் நிலையில், அவருக்கு எதிராக தமிழக கட்சிகள் போராடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சிகள் காட்டிய கருப்புக்கொடி, கருப்பு பலூன் போன்றவற்றைத் திரும்ப பெற வேண்டும். ஸ்டாலின் பெங்களூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். 

குட்கா விவகாரத்தில் எந்தக் கட்சி தவறு செய்து இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா விவகாரம் 10-15 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தான். குட்கா வழக்கில் சி.பி.ஐ., விசாரணை முழுமையாக நடத்தப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆட்சியாளர்களை ராஜினாமா செய்ய சொல்வது என்பது சரியாக இருக்காது. குட்கா விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்படுகின்றது. பா.ஜ.க., மீது எந்த புகாரும் இல்லாததால் காங்கிரஸ் கட்சி அமித்ஷா மீது தவறான தகவல்களை பரப்புகின்றது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...