அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்

கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ சிறப்பு மாநாடு கோவையில் தனியார் அரங்கில் நடைபெறுகிறது. மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையின்மையால் இளைஞர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற சூழலில், அரசுத்துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. உடனடியாக அனைத்து பணியிடங்களையும் நிரப்பத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். 

மேலும், வட்டாரங்களில் உருவாகும் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு உதவி இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நாளை நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு துறைச் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றியும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் இயக்க முடிவுகள் குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்து முடிவெடுக்க உள்ளனர். இம்மாநாட்டில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...