பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் கனரக வாகனங்கள் : குறுகிய சாலையால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்

கோவை : மேட்டுப்பாளையம் நடூர் நகராட்சியில் போடப்பட்டுள்ள குறுகிய சாலையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


கோவை : மேட்டுப்பாளையம் நடூர் நகராட்சியில் போடப்பட்டுள்ள குறுகிய சாலையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பகுதியில் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இருக்கும் மேட்டுப்பாளையத்தை கடந்துதான், உதகைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். இதனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் நடூர் வழியாக செல்லுமாறு போக்குவரத்தில் போலீசார் தற்காலிகமாக மாற்றம் செய்தனர். தற்காலிகமாக செய்யப்பட்ட இந்த ஏற்பாடு, பின்னர் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது.

நகராட்சியின் மிக குறுகிய சாலையாக இருக்கும் இந்த சாலையில்தான் நகராட்சி அரசுப்பள்ளி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காலை நேரத்தில் இந்த சாலைகள் மார்க்கத்தில், அதிவேகமாக வரும் வாகனங்களால் பள்ளி குழந்தைகளும் அப்பகுதி மக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். கனரக வாகனமான பேருந்தோ அல்லது லாரிகளோ ஒன்று வந்தால் கூட, அதனை நடந்து செல்பவர்களே விலகி செல்ல முடியாத அளவுக்கு சாலை குறுகிய நிலையில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், அந்த சாலை மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகளும் இதனைக் கடந்து செல்வதை பெரும் சவாலாக எதிர்கொண்டு வருகின்றனர். 



குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அன்னூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த நகராட்சி சாலைகளில்தான் இயக்கப்படுகின்றன. இதனால், சாலை ஓரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகமும் தடைபெறுகிறது. 

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சிக்கு ஆணையாளர் என தனியாக அரசு நியமிக்காத காரணத்தால், கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை. மேலும், புகார் பெறும் அதிகாரிகள் தான் மாறி மாறி செல்கின்றனர். தங்கள் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை என அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனையில். மாவட்ட நிர்வாகம் தலையிட்டாவது, உரிய தீர்வு கண்டு கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக வருவதைத் தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...