உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்து : அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கடந்த 14-ம் தேதி உதகை அருகே மந்தடா எனும் இடத்தில் அரசு பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பத்திற்கு பழுதடைந்த பேருந்தை இயக்கியதுதான் காரணம் எனப் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், பேருந்து விபத்தைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் உதகை மத்திய பேருந்து நிலையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமிது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விபத்திற்குக் காரணமான பழுதடைந்த அரசு பேருந்தை இயக்கக் கூறிய கிளை மேலாளர், துணை மேலாளர், உதவி செயற் பொறியாளர், பொறியாளர் ஆகிய 4 அதிகாரிகள் மேல் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், இனி இதுபோல, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். உதகையில், முதலமைச்சர் அறிவித்தபடி, அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செய்யது உள்பட ண100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...