தூர்வாரும் பணி: ஊட்டி படகு இல்ல ஏரியில் நீர் வெளியேற்றம்

நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.



ஊட்டி நகராட்சியின் பெரும்பாலான வார்டுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கோடப்பமந்து கால்வாய் வழியாக, ஊட்டி ஏரியின் கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, சுத்திகரிக்கப்பட்ட பின், ஊட்டி படகு இல்ல ஏரிக்குள் தண்ணீர் விடப்படுகிறது.

மழைக் காலங்களில் வெள்ளம் அதிகரிக்கும் போது, கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஏரியில் நேரடியாக விடுகின்றனர். இதனால் தற்போது, ஏரி முழுவதும் சகதி அதிகரித்து, சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஊட்டி நகராட்சி பொதுப்பணித் துறை அதிகாரிகள் இணைந்து, ஏரியை தூர்வார முடிவு செய்தனர். பருவமழையால் தூர்வாரும் பணிகளை தொடங்க முடியவில்லை. தற்போது, ஓரளவு மழை குறைந்துள்ளதால் ஏரியை தூர்வாரும் முற்கட்ட பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.



இதற்காக, ஏரியில் ஐந்து அடிவரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரியில் எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர் ரவி கூறுகையில், ''ஏரிக் கரையோரம் காய்ந்த பின், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து, தூர்வாரும் பணியை தொடங்க உள்ளோம்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...