தூத்துக்குடி: சாதி பாகுபாடில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி அருகே மும்மத போதகர்கள் முன்னிலையில் நடந்த பொறியியல் பட்டதாரிகளின் திருமணம் உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி: சாதி பாகுபாடில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி அருகே மும்மத போதகர்கள் முன்னிலையில் நடந்த பொறியியல் பட்டதாரிகளின் திருமணம் உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியில் பொறியியல் பட்டதாரிகளான சுனில்தேவ், அனுபிரபா ஆகியோரின் திருமணம் யாரும் எதிர்பார்த்திராத முறையில் இன்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்தத் திருமணத்தில், இந்து முறைப்படி மந்திரங்கள் ஓதி, தாலி கட்டிக் கொள்ளவில்லை. மாறாக, சாதி, மத வேறுபாடுகளைக் கலைந்து, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ முறைப்படி மும்மத போதகர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்த உலகத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் இதுபோன்று திருமணத்தை நடத்தியாக மணமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். மத ஒற்றுமையைப் போற்றும் வகையில் நடந்த திருமணத்திற்கு வருகை புரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்திச் சென்றனர்.