சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் விஜயின் 'சர்கார்'

நடிகர் விஜயின் 62-வது படமான 'சர்கார்' திரைப்படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜயின் 62-வது படமான 'சர்கார்' திரைப்படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், டிகர் விஜயின் 62-வது படமாக உருவாகும் படத்திற்கு சர்கார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படம், வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நேற்று நள்ளிரவில், சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது, இந்தப் படத்தின் பெயரில் ஹேஸ் டேக் (#sarkar) உருவாக்கப்பட்டு, டுவிட்டரில் முதல் டிரெண்டாக உள்ளது. இதேபோல, ஃபேஸ்புக்கிலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை, விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...