சமையல் செய்த போது வீட்டில் தீ: பெண் உடல் கருகி பலி

திருப்பூர்: காங்கேயம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர்: காங்கேயம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கீரனூர் கிராமம் சென்னிமலைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வாத்தாள் (67). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவர் மட்டுமே தனியாக தென்னங்கீற்றினால் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.

 

இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் தெய்வாத்தாள் வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் தென்னங்கீற்றில் நெருப்பு பட்டது. இதைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்தது. பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் தீயில் கருகியது.

இந்த தீயில் இருந்து தப்பிக்க முடியாத தெய்வாத்தாள் வீட்டினுள்ளேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...