டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: திருப்பூரில் மக்கள் சாலை மறியல்

திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



மாநகராட்சியின் 51-வது வார்டுக்கு உட்பட்ட திருப்பூர்-தாராபுரம் சாலையில் வேலாயுதசாமி மண்டபம் எதிரில் உள்ள காலி இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. 

கடை திறப்பதற்கு அப்பகுதியினர் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு புதிய கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அருகிலே உள்ள நிலையில், புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று கூறி அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடையை அகற்றிக்கொள்வதாக அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...