திருப்பூர் அருகே 4,500 லிட்டர் போலி கடலை எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல்

திருப்பூர் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், வேனில் கடத்திவரப்பட்ட 1,800 லிட்டர் போலி கடலை எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், வேனில் கடத்திவரப்பட்ட 4500 லிட்டர் போலி கடலை எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அன்னூர் - காரணம்பேட்டை சாலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். கே. தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, TN40 Z 1800 (407) என்ற எண் கொண்ட வாகனம் உணவு பொருள்களை ஏற்றிச்சென்ற போது, சந்தேகத்தின் பேரில் வாகனம் சோதனை செய்யப்பட்டது. அதில், இருந்த எண்ணெய் பாக்கெட்டுகளை ஆய்வு செய்த போது, அவை போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், கோவை மாவட்டம் அன்னூர் ஏ.எம். காலணி ராஜிவ் பகுதியில் செயல்பட்டு வரும் கணபதி ஆயில் மில்ஸின் எண்ணெய் பாக்கெட்டுக்கள் என்பது தெரியவந்தது. 



'ஓம் கணபதி கடலை எண்ணெய்' என்ற பெயரில் எண்ணெய் பாக்கெட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டு, திருப்பூர் நகரில் பல்வேறு பகுதிகளில் சிறிய கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும், ருக்கி கோல்ட் பாமாலின் ஆயில் 1 லிட்டர் பாக்கெட்டில், முகவரி மற்றும் தயாரிப்பு தேதியும், குறிப்பிடாமல் இருந்தது. பின்னர், அந்த எண்ணெய் பாக்கெட்டுகள் ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு துறைக்கு அனுப்பப்பட்டது.

"உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் ஒழுங்கு முறை விதிகளுக்கு முரணாக, மக்களை ஏமாற்றும் வகையில் எண்ணெய் பாக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும். பிடிபட்ட 4500 லிட்டர் கடலை எண்ணெயின் மதிப்பு ரூ.3,50,000 ஆகும்," இவ்வாறு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். கே.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...