வால்பாறையில் சிறுத்தைப்புலி மரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை

கோவை : வால்பாறை அருகே சிறுத்தைப்புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : வால்பாறை அருகே சிறுத்தைப்புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



வால்பாறையை அடுத்த புதுக்காடு தேயிலை தோட்டத்தில் 1 ஏ- என்.சி.-ல் இன்று காலை தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தேயிலை செடிபுதர் மறைவில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

"சிறுத்தைப்புலியின் உடலில் காயங்கள் இருந்ததுடன் மற்ற விலங்குகள் சாப்பிட்ட தடயம் இருக்கிறது. இறந்த ஆண் சிறுத்தை சுமார் 4 வயது மதிக்கத்தக்கது. நாளை நடைபெறும் உடல்கூறு ஆய்வுக்குப்பின் தான் சிறுத்தை எவ்வாறு இறந்தது என்பது தெரிய வரும்." என வனத்துறையினர் கூறினர். மேலும், சிறுத்தைப்புலியின் மரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...