இருக்கையின் மூலம் லாபத்தைத் தேடும் பேருந்துகள்: பயணிகளின் கூட்டத்திற்காக இருக்கைகள் அகற்றும் நூதனம்

கோவை: அதிக பயணிகளை ஏற்றுவதற்காக கோவை மாநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பின் இருக்கைகள் அகற்றப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை: அதிக பயணிகளை ஏற்றுவதற்காக கோவை மாநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பின் இருக்கைகள் அகற்றப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளுக்கும் நூற்றுக்கணக்கில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

தொழில்போட்டிக் காரணமாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளிடையே பயணிகளை அதிகமாக ஏற்ற வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் உள்ள பின் இருக்கைகளை அகற்றப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், இருக்கையில் 6 பேர் பயணிக்கக்கூடிய நிலையில் இருக்கையில்லாமல் 12 பேர் வரை பயணிக்க முடியும்.



இந்தப் புகாரை மறுக்கும் கோவை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர், தனியார் பேருந்துகளில் மட்டுமே இது போன்ற காரியங்கள் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இதுபோன்று செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதாக அவர் நம்மிடம் கூறினார்.

இது தொடர்பாக, கோவையை அடுத்த கணுவாய் பகுதிக்குப் பயணிக்கும் பயணி ஒருவர் நம்மிடம் கூறுகையில், "பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சொகுசு பேருந்துகள் தான் வருகின்றன. பயணச்சீட்டு அதிகமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் அதில் பயணிக்கின்றோம். ஆனாலும் கூட அதில் பின் இருக்கைகள் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்கும் சூழலில் தான் உள்ளது," என்றார்.



இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "வருவாய் காரணமாக தனியார் பேருந்துகளில் இதுபோன்று செய்யப்பட்டாலும் அரசு பேருந்துகளில் வருவாய்க்காக மட்டும் இது போன்று செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் அரசு தரப்பில் சொகுசு பேருந்துகளில் தான் இது மாதிரி செய்யப்படுகிறது. அவர்களிடம் போதுமான உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் தான் இது போன்று செய்யப்படுகிறது. சொகுசு பேருந்துக்கான பேருந்து பயணம் செய்ய அதிக பணம் வசூலிக்கப்பட்டும் கூட மக்கள் ஏன் நின்று கொண்டு பயணிக்க வேண்டும். கோவை மாநகரின் பல பகுதிகளில் பல்வேறு வழித்தடங்களில் இதுபோன்று அரசு சொகுசு பேருந்துகளில் பின் மற்றும் முன் இருக்கைகள் இல்லாமல் தான் இயக்கப்படுகின்றது," என்றார்.

தனியார் பேருந்துகள் பெரும்பாலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பேருந்துக்கான உரிமம் வாங்கும் போதும், அதன்பின் அதனைப் புதுப்பிக்கும் போது இருக்கைகள் இருக்கின்றன. அதற்குப் பிறகு, அதனை அகற்றிவிடுகின்றனர் என்பது தான் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது.

இது குறித்து கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் உதய்குமார் கூறுகையில், "இது போன்ற எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. அவ்வாறு இருப்பின், புகார் தெரிவித்தால் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...