அணையில் இருந்து வரும் நீர் அடைத்து வைக்கப்பட்டதாக வதந்தி: கோவையில் இளைஞர் கைது

கோவை: அணையிலிருந்து வரும் நீரை அடைத்து வைத்ததாக முகநூலில் வதந்தியைக் கிளப்பி, பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கோவையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: அணையிலிருந்து வரும் நீரை அடைத்து வைத்ததாக முகநூலில் வதந்தியைக் கிளப்பி, பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கோவையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், அனைத்து பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கீழ் சித்திரைச்சாவடிப் பகுதியைக் கடந்து வரும் தண்ணீரை பொதுமக்கள் சிலர் தடுப்பணையில் அடைத்து வைத்துள்ளதாக முகநூலில் செய்தி பரவியது. இதனால், தொண்டாமுத்தூர் மற்றும் பேரூர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கீழ் சித்திரைச்சாவடி மக்களுக்கு எதிராக பிரச்சனை ஏற்படுத்தும் சூழல் உருவானது.

இதனால், இதன் உண்மைத் தன்மையை ஆராய மேற்கு மண்டல பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், தடுப்பணைகளில் எந்த தடுப்பும் வைக்கவில்லை. தண்ணீர் வழக்கம்போல அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொண்டிருந்தது. இந்தத் தகவலை பொதுமக்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அமைதி ஏற்பட்டது.

இதனிடையே, முகநூலில் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான தகவலைப் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உதவி பொறியாளர் சிவகுமார் தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், முகநூலில் வதந்தியைக் கிளப்பிய மதுக்கரையைச் சேர்ந்த ராஜனின் மகன் சுரேஷ்குமார் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...