விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.ஐ., கைவிட்டது தொடர்பான விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்திவைப்பு

கோவை: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ., கைவிட்டது தொடர்பான விசாரணையை ஜூலை 19-ம் தேதி ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ., கைவிட்டது தொடர்பான விசாரணையை ஜூலை 19-ம் தேதி ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ல், முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ., தற்கொலைக்குக் காரணமாக குற்றவாளிகள் யாரும் இல்லை என்றும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சி.பி.ஐ., முழுமையான தகவலை தரவில்லை எனவும், அவர் இறப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்கள், தற்கொலை செய்த போது எழுதிய கடிதம் என அனைத்து தகவல்களும் ஆர்.டி.ஐ., மூலம் கேட்டுள்ளதாகவும், அந்த தகவல்கள் கிடைத்தவுடன் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...