ஜம்மு காஷ்மீரின் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக தமிழக அதிகாரி நியமனம்

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் ஆளும் பி.டி.பி., கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.



இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். எதிர்க்கட்சி ஆட்சி அமைக்க முன் வராததால் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டது.



இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.வி.ஆர்., சுப்ரமணியனை  புதிய தலைமை செயலாளராக ஆளுநர் வோரா நியமித்துளார்.

அத்துடன் ஆளுநரின் ஆலோசகராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.விலாஸ் ஆகியோர் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐ.பி.எஸ்., தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...