கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: பத்துக்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம்

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி என்ற பகுதியில் தாராபுரத்திலிருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பல்லடம் நோக்கி காடா துணிகளை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.



பெரும்பாளி என்ற பகுதிக்கு வந்த பொழுது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மினி ஆட்டோ மோதியது. ஆட்டோ பேருந்தின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் ஆறுமுகம் (47), பயணிகள் சுப்பம்மாள் (40), செல்வி (42) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



இந்த நிலையில், தப்பியோடிய விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை பல்லடம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...