'டிரென்ட்' ஆகும் யோகா: நாம் அதை சரியான முறையில் செய்து வருகிறோமா?

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம்.

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம். 

இந்தியாவில் யோகா-வுக்கு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது. நம்நாட்டில் கற்பிக்கப்பட்ட இந்த கலையின் மீது ஈர்ப்பு கொண்ட வெளிநாட்டவர்கள் இதனை பார்த்து, இதன் பயன்களை அறிந்து பரப்புரை செய்த பிறகு தான் நாம் யோகாவின் பலன்களை அறிந்து கொண்டோம். 

இது குறித்து, லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர். சில்பா ஷா கூறுகையில், "இந்த யோகா செய்வதால் ஆன்மிகம், உடல்நலம் போன்றவை அதிகரிக்கும். மேற்கத்திய நாட்டவர் புகழ் பெறச்செய்த நமது யோகாவை தற்போது நாம் கடைப்பிடித்து வருகிறோம். பொதுவாகேவே யோகா மூன்று காரணங்களுக்காக செய்யப்படுகிறது. உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க, உடலில் சிறிய பிரச்சனைகளை சரி செய்ய, ஆன்மீகத்தில் ஆர்வம் பெறுவதற்கு.

இவ்வாறு யோகா கலையை கற்றுக்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் அதற்குரிய பயிற்சியாளர்கள், யோகா மருத்துவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடம் தான் தேவைக்கேற்ப யோகா கற்க வேண்டும்." என்றார். 

தற்போதைய நவீன யுகத்தில் யோகா கற்றுக்கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன.இணையம் மற்றும் புத்தகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறான சூழலில் எதற்கு மற்றவர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும். 

இது குறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர்.ஹரிணி கூறுகையில், "என்னிடம் 55 வயதான ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக தானாகேவ யோகா கற்றுவருகிறார். சரியான வழி காட்டுதல் இல்லாத காரணமாக அவரது குடல் சற்று இறங்கியது. இதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. 

அவரால் இடதுபுறம் திரும்பி படுக்க முடியாத சூழலும் உருவானது. எனவே, நல்ல பயிற்சியாளர்களிடம் யோகா கற்பதே சிறந்ததாக இருக்கும்." என்றார். 

யோகா என்பது உடல் வளைந்து கொடுக்கக் கூடிய தன்மை பெறுவதற்காக மட்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உடல் பலத்தையும் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...