பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறையான தகவல் இல்லை: திருப்பூரில் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர். 

நீண்ட நேரமாகியும் கலந்தாய்வு தொடங்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்விற்கும், நாளை நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கும் காலி பணியிடங்கள் இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டன. 

இதனால் நீண்ட தூரத்தில் குழந்தைகளுடன் வந்து காத்திருந்த ஆசிரியர்கள் இதுகுறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...