இயற்கை வளங்களை காக்க போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் என்பதா..? பியூஷ் மனுஷ் சகோதரி கேள்வி

கோவை: இயற்கைக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள் அல்லது நக்சலைட்டுகள் எனக் கூறுவதா..? என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: இயற்கைக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள் அல்லது நக்சலைட்டுகள் எனக் கூறுவதா..? என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார். 

கோவை பிரஸ் கிளப்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷின் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், சகோதரி ஊர்வசி லுனியா பேசியதாவது :- நேற்று முன்தினம் பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ்மனுஷை கடத்தி சென்றது போல போலீசார் அவரை அழைத்து சென்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை. பியூஸ் மனுஷ் செல்போனை போலீசார் வைத்துள்ளனர். செல்போனை தங்களிடம் போலீசார் கொடுக்க மாட்டேன் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சேலம் - சென்னை சாலை குறித்து தனது கருத்தை பியூஸ் சொல்கிறார். அவர் மக்களைத் தூண்டிவிடவில்லை. தண்ணீர், நிலம், சுத்தமான காற்றுக்காகவும், விவசாயிகளுக்கும் போராடினால், குரல் கொடுத்தால் மாவோயிஸ்ட், நக்சல் என அரசு சொல்லுமா..?. 8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. இதைக் கேள்வி எழுப்பினால் பியூஸ் மனுஷ் கைது செய்யப்படுகின்றார். பியூஸ் மனுஷ் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முயலுகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பது மட்டும் போலீசாரின் பணியா..?

மக்களுக்கு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொடுப்பது, அறியாமையைப் போக்குவது போன்றவை போராட்டத்தை தூண்டும் செயலா..? பியூஸ் மனுஷ் கைது சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல. தமிழகம் தழுவிய அளவில் அனைத்துச் சுற்றுச்சுழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...