பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி., சேகர்

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி., சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி., சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக, தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். எனவே அவரைக் கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெறுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், எஸ்.வி. சேகர் ஆஜராகாமல், உல்லாசமாக சுற்றித் திரிந்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கைதாவதிலிருந்து அவரைக் காப்பாற்றினர். அதனால், எழும்பூர் நீதிமன்றம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புக்கிடையே எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...