பவானி ஆற்றை பாதுகாக்கும் வகையில் ரூ. 91 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். 

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உற்பத்தியாகும் பவானியாறு கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்திற்குள் நுழைகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு என 3 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி நதி மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவு நீர் கலப்பால் கடுமையாக மாசடைந்து வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் கரையோர ஊராட்சிகளின் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரிடையாக பவானியாற்றில் கலக்க விடப்படுவதாலும், இங்குள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள் சட்ட விரோதமாக திறந்து விடப்படுவதாலும் இந்த ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த இயலாத சூழல் நிலவி வருகிறது. 

நகராட்சி கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கென தமிழக அரசால் ரூ. 91 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இத்திட்டப்பணியின் துவக்க விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு திட்டப்பணியினை தொடங்கி வைத்தார். 

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ரூ. 40 கோடி செலவில் கோவை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் பல்லாண்டு கோரிக்கையான அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி மேம்படுத்தும் திட்டம் இன்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளபடி விரைவில் துவக்கப்பட்டு குறித்த காலத்தில் முடிக்கப்படும். இத்திட்டத்தில் விடுபட்டிருந்த பல பகுதிகள் புதிய திட்ட வரைவில் இணைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...